கோவை கரும்புக்கடை சாரமேடுவில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..!

கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.


Coimbatore: கோவை கரும்புக்கடைசாரமேடு பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது



தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி எடுக்கும் நிலையிலும் நாளுக்கு நாள் வேலையின் தாக்கம் அதிகமாக இருந்து வெப்ப அலை வீசுவதாலும் போதிய மழை நீர் இல்லாததாலும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.



இந்த நிலையில், பொதுமக்கள் குடிக்க தண்ணீர் இன்றியும், அணைகளில் நீர்வரத்து வரலாறு காணாத அளவில் குறைந்து வருவதால் கரும்புக்கடைசாரமேடு பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

விவசாயிகளும் போதிய நீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கால்நடைகளுக்கு புற்கள் கூட இல்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இதன் காரணமாக மழை பெய்ய வேண்டி கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் காலை 7 மணி அளவில் மௌலவி யூனுஸ்ஃபிர்தெளசி சிறப்பு தொழுகை நடத்தினார்.



இதில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த தொழுகையில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பொதுமக்கள் கலந்து கொண்டு மழை வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...