பொள்ளாச்சியில் வாக்கு இயந்திரத்தை பார்வையிட அனுமதி மறுப்பு - போலீசாருடன் திமுக வேட்பாளர் வாக்குவாதம்

வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் உயர் அதிகாரிகள் அனுமதி பெற்றே பின்னரே உள்ளே செல்ல முடியும் என போலீசார் தெரிவித்தனர். இதனால் போலீசாருடன் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரம் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை பார்வையிட சென்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி உள்ளிட்ட தலைமை முகவர் ஆகியோரை போலீசார் அனுமதிக்கவில்லை.



வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லாததால் உயர் அதிகாரிகள் அனுமதி பெற்றே பின்னரே உள்ளே செல்ல முடியும் என போலீசார் தெரிவித்தனர்.



இதனால் போலீசாருக்கும் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி மற்றும் அவருடன் வந்தவர்கள் அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி வாங்கிய பின்னர் திமுக வேட்பாளர் ஈஸ்வர சுவாமி மற்றும் தலைமை முகவர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.



பின்னர் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வாக்கு இந்திரங்கள் வைக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டதாகவும், தேர்தல் ஆணையம் நல்ல பாதுகாப்பு அளித்து இருப்பதாகவும் தெரிவித்த அவர், வாக்கு இயந்திரம் வைக்கபட்ட இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் குறித்து எந்த புகாரும் வரவில்லை என்றும் ஈஸ்வரசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...