போளுவாம்பட்டி வனப்பகுதியில் ஆண் சடலம் மீட்பு

போளுவாம்பட்டி காப்புக்காட்டில் வரையாடு கணக்கெடுப்பு பணியின் போது, சுமார் 45 வயதான ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு, காருண்யா நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.


Coimbatore: போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட நடுக்காட்டில் இன்று வரையாடு கணக்கெடுப்பு பணிகள் செய்யப்பட்டபோது, ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. வனத்துறையினர் அந்த சடலத்தை மீட்ட பின்னர், காருண்யா நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சடலம் சுமார் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவருடையது என அறியப்படுகிறது.


தகவல் பெற்ற போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...