ஊட்டியில் புதிய வரலாற்றை தொட்ட வெப்பம் - 84.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ஊட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று 84.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் தெரிவித்துள்ளது. பொதுவாக கோடைகாலத்தில் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஊட்டிக்கு இன்பச்சுற்றுலா செல்லும் நிலையில் தற்போது, ஊட்டியிலேயே வெப்பம் அதிகரித்து வருகிறது.

அதன்படி நேற்று (ஏப்ரல்.28) ஊட்டியில் இதுவரை இல்லாத அளவில் 84.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் (29 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவானது. அதாவது இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் (5.4 டிகிரி செல்சியஸ்) அதிகரித்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதற்கு முன் ஊட்டியில் கடந்த 1986ம் ஆண்டு 83 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும் இதுவே ஊட்டியில் பதிவான அதிகபட்ச வெப்பம் என்று இருந்த நிலையில், நேற்று ஊட்டி புதிய வரலாற்றை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...