ஊட்டியில் புதிய வரலாற்றை தொட்ட வெப்பம் - 84.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ஊட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று 84.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் தெரிவித்துள்ளது. பொதுவாக கோடைகாலத்தில் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஊட்டிக்கு இன்பச்சுற்றுலா செல்லும் நிலையில் தற்போது, ஊட்டியிலேயே வெப்பம் அதிகரித்து வருகிறது.

அதன்படி நேற்று (ஏப்ரல்.28) ஊட்டியில் இதுவரை இல்லாத அளவில் 84.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் (29 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவானது. அதாவது இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் (5.4 டிகிரி செல்சியஸ்) அதிகரித்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதற்கு முன் ஊட்டியில் கடந்த 1986ம் ஆண்டு 83 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும் இதுவே ஊட்டியில் பதிவான அதிகபட்ச வெப்பம் என்று இருந்த நிலையில், நேற்று ஊட்டி புதிய வரலாற்றை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...