ஊட்டியில் புதிய வரலாற்றை தொட்ட வெப்பம் - 84.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ஊட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று 84.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் தெரிவித்துள்ளது. பொதுவாக கோடைகாலத்தில் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஊட்டிக்கு இன்பச்சுற்றுலா செல்லும் நிலையில் தற்போது, ஊட்டியிலேயே வெப்பம் அதிகரித்து வருகிறது.

அதன்படி நேற்று (ஏப்ரல்.28) ஊட்டியில் இதுவரை இல்லாத அளவில் 84.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் (29 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவானது. அதாவது இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் (5.4 டிகிரி செல்சியஸ்) அதிகரித்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதற்கு முன் ஊட்டியில் கடந்த 1986ம் ஆண்டு 83 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும் இதுவே ஊட்டியில் பதிவான அதிகபட்ச வெப்பம் என்று இருந்த நிலையில், நேற்று ஊட்டி புதிய வரலாற்றை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...