எல்லாரும் மனரீதியில் ஒன்றாக சேர்ந்து கோவிலை காப்பாற்றுங்கள் - பொள்ளாச்சியில் முன்னாள் போலீஸ் ஐஜி பொன்மாணிக்கவேல் பேட்டி

பிரச்சனை என்று வரும்போது கோவில் சூறையாடப்படுகிறது. இப்போதாவது திருந்தி வாருங்கள். எல்லாரும் மனரீதியில் ஒன்றாக சேர்ந்து கோவிலை காப்பாற்றுங்கள் என்று முன்னாள் போலீஸ் ஐஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிவனடியார்கள், முருக பக்தர்கள் அனைத்து ஆன்மீக அன்பர்களையும் ஒருங்கிணைக்கும் ஆன்மீக விழா நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் போலீஸ் ஐஜி பொன்மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்.

இதில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு சிவனடியார்கள், முருக பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு முன்னாள் போலீஸ் ஐஜி .பொன்மாணிக்கவேல் பேட்டி அளிக்கையில் கூறியதாவது. இந்துக்கள் உடைந்தனர், ஆதீனம் ஒரு புறம், வைணவர்கள் ஒரு புறம், சைவர்கள் ஒருபுறம் என அனைவரும் உடைந்து தொங்குவதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் தொங்கிக் கொள்ளுங்கள். கருத்து வேறுபாடுகள் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் ஒன்றாக வாருங்கள். பிரச்சனை என்று வரும்போது கோவில் சூறையாடப்படுகிறது. இப்போதாவது திருந்தி வாருங்கள் எல்லாரும் மனரீதியில் ஒன்றாக சேர்ந்து கோவிலை காப்பாற்றுங்கள். கோவிலுக்கு மட்டும் பிரச்சினை என்றால் எல்லாரும் ஒன்றாய் சேருங்கள். இந்த கூட்டத்தில் மட்டுமே எல்லாரையும் ஒருங்கிணைக்க காரணம் தனித்தன்மையை வைத்துக் கொள்ளுங்கள் விட்டு விடாதீர்கள்.

சுதந்திரமாக செயல்படுங்கள். ஆனால் பிரச்சனை என்று வரும்போது கோவில் சம்பந்தப்பட்டது கோவில் இருக்கக்கூடிய தெய்வ விக்கிரகங்களுக்கு கோவில் சொத்துக்களுக்கு பிரச்சினை வரும்போது காக்கா கூட்டம் போல் ஒன்றாக வரவேண்டும் என்ற ஒரு சின்ன முயற்சி எடுக்கிறேன். இதிலும் நமக்கு பின் வாங்கியது எல்லாம் வரும் ஜெயிக்க எல்லாம் என்னால் முடியாது நன்றாக தெரியும். பின்வாங்கி வர முயற்சி அதிகம் பன்னிகொண்டேதான் போவேன். எல்லாரையும் ஒன்றாக கொண்டு வருகிறோம் என்றார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...