உலகம் முழுவதும் போதைப்பொருள் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது - பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு

விலைவாசி ஏற்றம், மின் கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் மௌன புரட்சியாக பாராளுமன்ற தேர்தல் முடிவில் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்றார்.


Coimbatore:தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் வழங்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளார். இதனையடுத்து பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு கொடுத்த 525 வாக்குறுதிகளில் முறையாக எதையும் நிறைவேற்றவில்லை. மக்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்து வருகின்றனர். லஞ்ச லாவண்யம் பெருத்து விட்டது. ஜல்லி, மணல் போன்ற கனிம வளங்கள் கடத்தல் அதிகரித்து பல்வேறு சட்டவிரோதம் நடைபெற்று வருகிறது. தமிழகம் ஊழல் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது.



விலைவாசி ஏற்றம், மின் கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் மௌன புரட்சியாக பாராளுமன்ற தேர்தல் முடிவில் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். மேலும் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. எப்படி கடிகாரம் ஏற்றுமதியில் சுவிட்சர்லாந்து முதன்மை நாடாக உள்ளதோ, அதேபோல தமிழகம் உலகம் முழுவதற்கும் போதைப்பொருள் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக மாறிவிட்டது என்று குற்றம் சாட்டினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...