பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்பிரகாரத்தில் கூலிங் பெயிண்ட் - பக்தர்கள் மகிழ்ச்சி

பேரூர் கோவிலின் பிரகாரத்தை சுற்றி வரும் தரையில் கூலிங் பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. நீல நிறத்தில் காணப்படும் இந்த பெயிண்ட் பூசப்பட்ட பகுதியின் வழியாக நடந்து செல்லும் போது பாதங்கள் சுடுவதில்லை என பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

புகழ்பெற்ற இந்த கோவிலின் உள்பிரகாரம் கருங்கற்களால் ஆனது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கருங்கற்களால் ஆன பிரகாரத்தை சுற்றி வர முடியாமல் பக்தர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மேலும் பிரகாரத்தை சுற்றி வரும் பக்தர்கள் பலர் கால்கள் சுடுவதால் பிரகாரத்தை சுற்றி வருவதை தவிர்த்து வந்தனர்.



இந்த நிலையில் அண்மையில் தனியார் உபயதாரர் மூலம் பேரூர் கோவிலின் பிரகாரத்தை சுற்றி வரும் தரையில் கூலிங் பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. நீல நிறத்தில் காணப்படும் இந்த பெயிண்ட் பூசப்பட்ட பகுதியின் வழியாக பக்தர்கள் நடந்து செல்லும் போது அவர்களின் பாதங்கள் சுடுவதில்லை. இதனால் பக்தர்கள் மன நிம்மதியுடன் பிரகாரத்தை தற்போது வலம் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர் என கோவிலில் பணிபுரிபவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...