கடும் வறட்சி காரணமாக கோழிகமுத்தி யானைகள் முகாமிலிருந்து வேறு இடங்களுக்கு யானைகள் இடமாற்றம்

கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் கடும் வறட்சி நிலவுவதால், அங்கிருந்த 20 வளர்ப்பு யானைகளை, மானாம்பள்ளி பகுதிக்கு ஐந்து யானைகள், வறகளியாறுக்கு ஐந்து யானைகள், சின்னார் பகுதிக்கு 10 யானைகள் என 20 யானைகளையும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.


கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள டாப்ஸ்லிப் பகுதியில் கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளில் சில யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு கும்கியாக மாற்றி பல்வேறு பகுதிகளுக்கு வனப்பணிக்காக அழைத்துச் செல்லபடுகிறது.



தற்போது கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் கடும் வறட்சி ஏற்பட்டு யானைகளுக்கு போதுமான அளவு நீர் இருப்பு இல்லாததால் அங்கிருந்த 20 வளர்ப்பு யானைகளை நீர் உள்ள மானாம்பள்ளி பகுதிக்கு ஐந்து யானைகள், வறகளியாறுக்கு ஐந்து யானைகள், சின்னார் பகுதிக்கு 10 யானைகள் என ஆகிய மூன்று வனப்பகுதிகளுக்கும் யானைகளை அனுப்பி அங்கு பராமரித்து வருகின்றனர்.

இந்த யானைகள் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு பராமரிக்கப்பட்டு மீண்டும் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...