கடும் வறட்சி காரணமாக கோழிகமுத்தி யானைகள் முகாமிலிருந்து வேறு இடங்களுக்கு யானைகள் இடமாற்றம்

கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் கடும் வறட்சி நிலவுவதால், அங்கிருந்த 20 வளர்ப்பு யானைகளை, மானாம்பள்ளி பகுதிக்கு ஐந்து யானைகள், வறகளியாறுக்கு ஐந்து யானைகள், சின்னார் பகுதிக்கு 10 யானைகள் என 20 யானைகளையும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.


கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள டாப்ஸ்லிப் பகுதியில் கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளில் சில யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு கும்கியாக மாற்றி பல்வேறு பகுதிகளுக்கு வனப்பணிக்காக அழைத்துச் செல்லபடுகிறது.



தற்போது கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் கடும் வறட்சி ஏற்பட்டு யானைகளுக்கு போதுமான அளவு நீர் இருப்பு இல்லாததால் அங்கிருந்த 20 வளர்ப்பு யானைகளை நீர் உள்ள மானாம்பள்ளி பகுதிக்கு ஐந்து யானைகள், வறகளியாறுக்கு ஐந்து யானைகள், சின்னார் பகுதிக்கு 10 யானைகள் என ஆகிய மூன்று வனப்பகுதிகளுக்கும் யானைகளை அனுப்பி அங்கு பராமரித்து வருகின்றனர்.

இந்த யானைகள் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு பராமரிக்கப்பட்டு மீண்டும் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....