கடும் வெயிலால் கோவையில் இளநீர் விலை உயர்வு - ஒரு இளநீர் ரூ.45 விற்பனை

வெயிலின் தாக்கம் அதிக அளவு இருப்பதால் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிக அளவு இளநீரை பருகி வருகின்றனர். இதன் காரணமாக இளநீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது என்று வியபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: ஜில்லென்று காற்று வீசும் குளுகுளு கோவையில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வரலாறு காணாத அளவு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெயிலில் இருந்து பொதுமக்கள் தப்பித்துக்கொள்ள இளநீர், தர்பூசணி, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, கரும்பு ஜூஸ், கூல், மோர் உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி ஊட்டக்கூடிய பானங்களை பருகி வெப்பத்தை தனித்து வருகிறார்கள்.இந்த நிலையில், வெயிலுக்கு இளநீர் உகந்ததாக இருப்பதால் இளநீர் கடைகளில் விற்பனை சூடுபிடித்து உள்ளது.

இதன் காரணமாக கோவையில் இளநீர் விலை உயர்ந்து உள்ளது. அதன்படி கடந்த மாதம் ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்ட இளநீர் ஒன்று தற்போது (ஏப்ரல்.23) ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து இளநீர் வியாபாரிகள் கூறுகையில், கோவைக்கு பொதுவாக பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளநீர் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிக அளவு இருப்பதால் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிக அளவு இளநீரை பருகி வருகிறார்கள். இதன் காரணமாக இளநீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால் இளநீர் விலை உயர்ந்து இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் ஒரு இளநீரின் விலை ரூ.50-ஐ தொட்டு விடும் என்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...