உலக புவி தினத்தை முன்னிட்டு மதுக்கரை பிள்ளையார்புரத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா

தான்றி காய், பரு பலா, ஒதியன், முள் முருங்கை, வேப்பமரம், புங்க மரம், நாவல் மரம், சிவகுண்டலம், பரம்பை, கொடுக்காபுலி போன்ற 100 வகைகளில் 1000 மரங்களை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர்கள் நட்டனர்.


கோவை: உலக புவி தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் இன்று (ஏப்ரல்.22) நடைப்பெற்றது.



இதில் கே.பி.ஆர்.கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தான்றி காய், பரு பலா, ஒதியன், முள் முருங்கை, வேப்பமரம், புங்க மரம், நாவல் மரம், சிவகுண்டலம், பரம்பை, கொடுக்காபுலி போன்ற 100 வகைகளில் 1000 மரங்கள் நட்டனர்.



இவ்விழாவில் வனவர் கோ.ஜோதிர்லிங்கம், தமிழ்நாடு வனத்துறை தலைவர் பி.வி.கோபால், பூளைமேடு கன்சியூமர் வாய்ஸ் இரா.மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...