உலக புவி தினத்தை முன்னிட்டு மதுக்கரை பிள்ளையார்புரத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா

தான்றி காய், பரு பலா, ஒதியன், முள் முருங்கை, வேப்பமரம், புங்க மரம், நாவல் மரம், சிவகுண்டலம், பரம்பை, கொடுக்காபுலி போன்ற 100 வகைகளில் 1000 மரங்களை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர்கள் நட்டனர்.


கோவை: உலக புவி தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் இன்று (ஏப்ரல்.22) நடைப்பெற்றது.



இதில் கே.பி.ஆர்.கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தான்றி காய், பரு பலா, ஒதியன், முள் முருங்கை, வேப்பமரம், புங்க மரம், நாவல் மரம், சிவகுண்டலம், பரம்பை, கொடுக்காபுலி போன்ற 100 வகைகளில் 1000 மரங்கள் நட்டனர்.



இவ்விழாவில் வனவர் கோ.ஜோதிர்லிங்கம், தமிழ்நாடு வனத்துறை தலைவர் பி.வி.கோபால், பூளைமேடு கன்சியூமர் வாய்ஸ் இரா.மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...