தாராபுரம் அருகே கோழிக் கழிவுகளை கொட்ட வந்த ஈச்சர் வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்

தாராபுரம் அருகே மூலனூர் ஊராட்சி நாச்சிபாளையம் பிரிவில் பொதுமக்கள் கேரளாவில் இருந்து வரும் ஈச்சர் வாகனத்தை சிறைபிடித்தனர். கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வந்த சம்பவம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிபாளையம் பிரிவு என்ற இடத்தில் கேரளாவில் இருந்து வந்த ஈச்சர் வாகனம் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டது.



கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் இருந்து கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் எடுத்து செல்லப்பட்டது.



இது குறித்து நாச்சிபாளையம் பிரிவின் பொதுமக்கள் கூறியபோது, கேரளாவில் இருந்து மலப்புரம் பகுதியில் கோழி கழிவுகளை மற்றும் மருத்துவ கழிவுகளை ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொட்டச் செல்வது ஒரு தொடர்ச்சியாக நடந்து வருகிறது.



பின்னர் மூலனூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர் தண்டபாணி இந்த செய்தியை அறிந்து அதிகாரிகளிடம் ஈச்சர் வாகனத்தை ஒப்படைக்கச் செய்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...