பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பெட்டி இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பூட்டி வைப்பு

நா.மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டி இயந்திரங்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சர்மிளா, பொள்ளாச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா, வருவாய்த் துறையினர் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.


கோவை: தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்த நிலையில் அனைத்து பகுதிகளிலும் வாக்கு பெட்டி இயந்திரங்களில் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் 1715 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது.



நேற்று இரவு முதல் வாக்குப் பெட்டி இயந்திரங்கள் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள நா.மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கபட்டுள்ள வாக்கு மையத்தில் வைக்கும் பணி நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சர்மிளா, பொள்ளாச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா, வருவாய்த் துறையினர் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...