பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பெட்டி இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பூட்டி வைப்பு

நா.மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டி இயந்திரங்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சர்மிளா, பொள்ளாச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா, வருவாய்த் துறையினர் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.


கோவை: தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்த நிலையில் அனைத்து பகுதிகளிலும் வாக்கு பெட்டி இயந்திரங்களில் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் 1715 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது.



நேற்று இரவு முதல் வாக்குப் பெட்டி இயந்திரங்கள் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள நா.மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கபட்டுள்ள வாக்கு மையத்தில் வைக்கும் பணி நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சர்மிளா, பொள்ளாச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா, வருவாய்த் துறையினர் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Newsletter

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் நியாயவிலைக்கடை ஆய்வும் தூய்மைப் பணிகளும்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டார். குப்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்த...