மாநில எல்லையில் மட்டும் வாகன சோதனை - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு விளக்கம்

கடந்த 2019 தேர்தலில் இரவு 7:00 மணிக்கு 69 சதவீத ஓட்டுகள் பதிவானதாவும், நேற்று நடைபெற்ற தேர்தலில் 72.09 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு கூறியதாவது, மாநிலம் முழுதும் இரவு 7:00 வரை 72.09 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இதில், தபால் ஓட்டுகள் சேர்க்கப்படவில்லை. ஓட்டுச்சாவடியில் பதிவான 2 ஓட்டுகள் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலில் இரவு 7:00 மணிக்கு 69 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

நேற்று வெயில் அதிகம் இருந்ததால் மாலை 3:00 மணிக்கு மேல் ஏராள மானோர் ஓட்டளித்தனர். மாலை 6:00 மணிக்கு உள்ளாக ஓட்டளிக்க வந்தவர்களுக்கு, டோக்கன் கொடுத்து ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர்.

ஓட்டுப்பதிவு முடிந்து விட்டதால், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு நிறைய இடத்தில் மாற்றப்படும். தேர்தல் கமிஷன் அறிவுரையின்படி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தேர்தல் நடக்கும் வரை, எல்லை பகுதியில் தேவைக்கேற்ப பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு செயல்படும், மற்ற பகுதிகளில் செயல்படாது.

எல்லை பகுதியில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும். ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள், கட்சியினர் அறிக்கை அடிப்படையில், மறுஓட்டுப்பதிவு தேவையென்றால் நடத்தப்படும். தேர்தல் மிகவும் சுமுகமாக, சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சிறப்பாக செயல்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...