சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன் மக்கள் திடீர் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

நீண்ட நேரம் காத்திருந்தும் அரசு பேருந்துகள் வராததால் பயணிகள் பேருந்து நிலையத்தின் முன்பாக சிங்கநல்லூர்-வரதராஜபுரம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


கோவை: தமிழ்நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு (ஏப்ரல்.19) நடைபெற்றது. இதற்காக கோவையில் இருந்து தென் மாநிலங்களுக்கு செல்ல 200க்கும் மேற்பட்ட பேருந்து சேவைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் (ஏப்ரல்.19) காலை கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஏராளமான பயணிகள் வருகை தந்தனர். ஆனால் போதுமான அரசு பேருந்துகள் இயக்கப்படாததால், நீண்ட நேரமாக பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.



தனியார் பேருந்தில் செல்லலாம் என்றால் டிக்கெட் விலையை உயர்த்தி விற்கின்றனர். மேலும் மாலை 6 மணிக்கு முன்பாக சொந்த ஊர்களுக்கு சென்றால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பதால், அவர்கள் தவித்தனர். இதனிடையே நீண்ட நேரம் காத்திருந்தும் அரசு பேருந்துகள் வராததால் பயணிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்தின் முன்பாக சிங்கநல்லூர்-வரதராஜபுரம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரும், போக்குவரத்து துறை அதிகாரிகளும், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...