உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு – பொதுமக்கள் தேர்தல் புறக்ணிப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், விவசாயிகளுக்கு மறுபயிர் கடன் வழங்காத காரணத்தினாலும் தேர்தலை புறக்கணிப்பாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடைபெற்றது. இந்த நிலையில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், விவசாயிகளுக்கும் மறுபயிர் கடன் வழங்காமல் காலதாமதம் பண்ணுவதை கண்டித்தும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக கடந்த வாரம் பேனர் வைத்து கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.



எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறாததால் பொதுமக்களும், விவசாயிகளும் ஒருமனதாக இந்த நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரது சொத்துக்களையும் முடக்கம் செய்ய வேண்டும் எனவும், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், அதனால் தேர்தல் புறக்கணிப்பை முடிவு செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...