உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு – பொதுமக்கள் தேர்தல் புறக்ணிப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், விவசாயிகளுக்கு மறுபயிர் கடன் வழங்காத காரணத்தினாலும் தேர்தலை புறக்கணிப்பாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடைபெற்றது. இந்த நிலையில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், விவசாயிகளுக்கும் மறுபயிர் கடன் வழங்காமல் காலதாமதம் பண்ணுவதை கண்டித்தும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக கடந்த வாரம் பேனர் வைத்து கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.



எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறாததால் பொதுமக்களும், விவசாயிகளும் ஒருமனதாக இந்த நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரது சொத்துக்களையும் முடக்கம் செய்ய வேண்டும் எனவும், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், அதனால் தேர்தல் புறக்கணிப்பை முடிவு செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...