உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கோவிலில் வேள்வி வளர்த்தப்பட்டு மாரியம்மன் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, பின்னர் கோவிலில் உள்ள கொடிக்கம்பத்தில் மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ம் தேதி பூச்சொரிதல், நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. 2-வது நிகழ்வாக 16-ம் தேதி கம்பம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் அடையாளமாக கருதப்படும் கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று தேவாங்கர் சமூக நல மன்றத்தின் சார்பில் நடைபெற்றது.



முன்னதாக கோவிலில் வேள்வி வளர்த்தப்பட்டு மாரியம்மன் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் கோவிலில் உள்ள கொடிக்கம்பத்தில் மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னர் கொடியேற்றம் பகுதியில் உள்ள மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு, சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி...

நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலவச மின்சாரம் வழங்க மனு

Erode மாவட்டத்தில் முதல்வர் Stalin ஐ சந்தித்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இ...