சுங்கம் பகுதியில் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார் கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி

சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா பெண்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பின்னர் ஓட்டுபோட்டுவிட்டு வந்தவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான ஓட்டுப்பதிவு பல்வேறு மையங்களில் இன்று (ஏப்ரல்.19) விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற திட்டத்தின் கீழ் வாக்குச்சாவடி மையங்களில் மரக்கன்றுகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் வாக்கு போட்டு விட்டு வருபவர்களுக்கு இந்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் கோவை சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா பெண்கள் கல்லூரிக்கு இன்று மதியம் சென்றார். பின் வாக்குச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குப்பதிவு குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மரக்கன்றுகளை ஒட்டு போட்டுவிட்டு வருபவர்களுக்கு வழங்கினார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...