கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

நான் வாக்களித்து விட்டேன். மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.


கோவை: கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இன்று (ஏப்ரல்.19) தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்நாடாளுமன்றத் தேர்தல் இந்திய திருநாட்டில் இன்று ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் இன்று நடைபெறுகிறது. ஏழாவது கட்டம் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து தேர்தல் முடிவுகள் (ஜூன்.4) தேதி வெளியாக உள்ளது. நான் வாக்களித்து விட்டேன். மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் மதியம் மிகவும் வெயில் இருக்கும். எனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வெயில் வரும் முன்பே வாக்களிக்கச் செல்லுங்கள் என்று கூறினார்.

மேலும் வாக்குச்சாவடிகளில் கூட்டம் இருக்கும் என்பதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும். எனவே வாட்டர் பாட்டிலில் தண்ணீரை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...