கோவை மக்களவைத் தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து வாக்குச் சாவடி மையங்களுக்கு EVM Machine, VV Pad, Control Unit, Ballet Unit, Voting Compartment, முதியவர்களுக்கான நாற்காலிகள், வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் ஆகியவற்றை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.


கோவை: மக்களவைத் தேர்தலையொட்டி கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து வாக்குச் சாவடி மையங்களுக்கு EVM Machine, VV Pad, Control Unit, Ballet Unit, Voting Compartment, முதியவர்களுக்கான நாற்காலிகள் உட்பட வாக்கு செலுத்தும் இயந்திரங்கள், கோவை மக்களவைத் தொகுதிக்கான வாக்குச்சாவடி மையங்களுக்கு, மண்டல அலுவலர்கள், துணை மண்டல் அலுவலர்கள், தேர்தல் அதிகாரி, காவல்துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி இன்று (ஏப்ரல்.18) நடைபெற்று வருகிறது.



அதனை வட்டாட்சியர்கள் மற்றும் துணை வட்டாட்சியர்கள் முன்னிலையில் வாகனங்களில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி ஒரு வாகனத்தில் ஒரு மண்டலத்துக்குட்பட்ட 10 முதல் 15 வாக்குச்சாவடி மையங்களுக்கு இயந்திரங்களை எடுத்துச் செல்கின்றனர்.



மேலும் வாகனங்களை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. 33 வாகனங்களில் 430க்கு மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இப்பணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், 500-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...