கோவையில் பாஜகவினர் ஓட்டுக்காக பணம் வழங்கும் முயற்சியில் பிடிபட்டனர்

கோவையில் பூலுவபட்டியில் நள்ளிரவில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க முயற்சித்த போது பறக்கும் படையினரால் ரூ. 81,000 பணம் மற்றும் பூத் ஸ்லீப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Coimbatore:

கோவை மாவட்டம் பூலுவபட்டியில் நள்ளிரவு, பாஜகவினர் பல்வேறு வார்டுகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க முயற்சித்த போது, பறக்கும் படை அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டு, ரூ. 81,000 மற்றும் பூத் ஸ்லீப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நபர்கள் வார்டு எண் 12, 13, 14, 15 பகுதிகளில் பணம் விநியோகிக்கப்படுவதாக திட்டமிட்டிருந்தனர். சென்றவர்களில் ஆலந்துறை பாஜகவின் மண்டல் தலைவர் ஜோதிமணி ஆகியோர் பெருமளவில் பணம் பதுக்கியிருந்த சம்பவமும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

பாஜகவை சார்ந்த நபர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்டத் தேர்தல் கட்டுப்பாடு அறையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கொண்ட சோதனையில்பறக்கும் படையினரால் பணம் பறிமுதல்







கோவை மாவட்டம் பூலுவபட்டிமாரியப்பன் டீக்கடையில் வைத்து வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு பணம் வழங்க நோட்டில் பிரித்து எழுதிக் கொண்டிருந்த நபர்களை நள்ளிரவு பறக்கும் படையினர் பிடித்தனர்.







வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகமாவட்ட தேர்தல்கட்டுப்பாட்டு அறையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பறக்கும் படையினர், ஆலந்துறை பாஜகவின்மண்டல் தலைவர் ஜோதிமணி என்பவர்வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூபாய் 81,000 பணத்தை பிடித்து, பேரூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பிடிக்கும் பொழுது வாக்காளரின் பெயர், முகவரி அடங்கிய பூத் ஸ்லீப் கையில் இருந்ததையும் கைப்பற்றினர்.

பூலுவபட்டி பஞ்சாயத்தில் வார்டு எண் 12,13,14,15 ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாகவும், அடுத்த வார்டுகளுக்கு பணம் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...