பொள்ளாச்சியில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயாநிதி ஸ்டாலின் பரப்புரை

மக்கள் போடுகிற ஓட்டு மோடிக்கு வைக்கிற வேட்டு என்றும், தமிழகத்திற்கு பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை என்றும், மோடி தேர்தலுக்காக தமிழகத்திற்கு வந்து செல்கிறார் என்றும் அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஈஸ்வரசாமியை ஆதரித்து பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய அவர், மக்கள் உதய சூரியனுக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள். மக்கள் போடுகிற ஓட்டு மோடிக்கு வைக்கிற வேட்டு என்றும், தமிழகத்திற்கு பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை என்றும், மோடி தேர்தலுக்காக தமிழகத்திற்கு வந்து செல்கிறார் என்றும், பொள்ளாச்சியில் கூடுதல் செவிலியர் கல்லூரி அமைக்கப்படும், ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காய் கொள்முதல் செய்யப்படும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய பரீசிலனை செய்யப்படும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பெட்ரோல், டீசல், விலை குறைக்கப்படும், உலகத்திலேயே கேடுகெட்ட மானங்கெட்ட முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும், சசிகலா அம்மாவுக்கு துரோகம் செய்தவர் பாதம்தாங்கி எடப்பாடி பழனிசாமி என்றும், அண்டை மாநிலத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பது திராவிட மாடல் ஆட்சி என்றும், தரமான காலை உணவுதிட்டம், கல்வி கொடுத்து வருவது திராவிட மாடல் அரசு என்றும், கோவை மாவட்டத்தில் 5 லட்சம் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழகத்தை மதிக்கக் கூடிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் பரப்புரையின் போது உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...