பல்லடத்தில் நான்கு பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை – நீதிபதி அதிரடி தீர்ப்பு

மது குடிப்பதை தட்டிக்கேட்ட நான்கு பேரை வெட்டிக்கொன்ற நான்கு குற்றவாளிகளுக்கும் தலா 4 ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.


திருப்பூர்: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி இரவு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் வசித்து வந்த செந்தில்குமார், மோகன்ராஜ், ரத்தினம்மாள் மற்றும் புஷ்பவதி ஆகியோர் தனது வீட்டின் அருகே மது அருந்திய நபர்களை தட்டிக் கேட்டதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

கொலையில் தொடர்புடைய, செல்லமுத்து, 24, ஐயப்பன், 52, ராஜ்குமார், 27, சோனை முத்தையா, 30 மற்றும் வெங்கடேஷ், 29 என 5 பேரை போலீசார் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இதில் விசாரணையின் போது தப்பிக்க முயன்றதாக குட்டி என்கின்ற வெங்கடேஷ் என்பவனை போலீசார் கால் முட்டியில் சுட்டு பிடித்தனர். குட்டி என்கின்ற வெங்கடேஷ் கோவையில் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்போடு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர், 800 பக்கத்திற்கு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.



இந்நிலையில் நேற்று திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கள்ளக்கிணறு கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி சொர்ணம் நடராஜன் 55 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு 4 கொலைக்கு சேர்த்தே முதல் குற்றவாளி ராஜ்குமாருக்கு 4 ஆயுள் தண்டனை 1000 அபராதம், இரண்டாவது குற்றவாளி செல்லமுத்துவுக்கு 4 ஆயுள் தண்டனை 1000 அபராதம்,

மூன்றாவது குற்றவாளி சோனை முத்தையாவிற்கு 4 ஆயுள் தண்டனை 1000 அபராதம், 4வது குற்றவாளி அய்யப்பனுக்கு 4 ஆயுள் தண்டனை 1000 அபராதமும்,

குற்றவாளிகளுக்கு அடைக்கலம் வழங்கிய 5 வது குற்றவாளி வெங்கடேஷ்க்கு இரண்டு 3 ஆண்டு தண்டனை 2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...