கோவையில் மக்கள் உரிமையை பேணிகாக்க திமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் – உக்கடத்தில் ஜவாஹிருல்லா பிரச்சாரம்

காஷ்மீரில் ஆசிபா சிறுமி கொல்லப்பட்டது, பால் வியாபாரி கொல்லப்பட்டது, ஜுனைத்கான் ரயிலில் கொல்லப்பட்டது, இவற்றை எல்லாம் நம்மால் மறக்க முடியுமா? என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.


கோவை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து உக்கடம் ஜி.எம் நகர் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நேற்று (ஏப்ரல்.15) பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், கணபதி ராஜ்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றியத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவதை குறிப்பிட்ட அவர், இந்த பாஜக ஆட்சியில் பல கொடும்பான்மைகள் மக்களுக்கு எதிராகவும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் நடைபெற்றதாக தெரிவித்தார்.



காஷ்மீரில் ஆசிபா சிறுமி கொல்லப்பட்டது, பால் வியாபாரி கொல்லப்பட்டது, ஜுனைத்கான் ரயிலில் கொல்லப்பட்டது, இவற்றை எல்லாம் நம்மால் மறக்க முடியுமா? இந்த நிகழ்வுகள் எல்லாம் நடைபெறும் பொழுது அதனை எதிர்த்து கடுமையான அறிக்கைகளை வெளியிட்டவர் இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாடு தலைமை தாங்கக்கூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார். ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி இந்த நிகழ்வுகளை எல்லாம் கண்டித்து ஒரு வார்த்தையாவது பேசியது உண்டா? என கேள்வி எழுப்பினார்.

பாஜகவுடன் உறவை துண்டித்து விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார் என தெரிவித்த அவர், அவர்களுக்கு மத்தியில் ஒரு கள்ளக்காதல் இருக்கின்றது என விமர்சித்தார். தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக இந்த தேர்தலில் தனித்தனியாக நிற்கின்றார்கள் என்பதுதான் உண்மை என கூறிய அவர், எங்கேயாவது எடப்பாடி பழனிச்சாமி மோடி பிரதமர் ஆவதை நான் ஆதரிக்கவில்லை என எங்கேயாவது பேசி இருக்கிறாரா? என கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலையையும் மற்ற பாஜக தலைவர்களையும் திட்டுவதை நான் மறுக்கவில்லை எனவும், ஆனால் மோடி பிரதமராக கூடாது எங்கள் பிரதமர் மோடி இல்லை என்றுபேசி இருக்கிறாரா? அவர் பேசவில்லை என்றார்.

இந்தியா கூட்டணியில் கோவைக்கு வந்த ராகுல் காந்தி பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில் ஒரு ஸ்வீட் கடையை பார்த்ததும் காரை விட்டு இறங்கி சென்று இனிப்புகளை வாங்கி அதற்கான காசையும் கொடுத்துவிட்டு அந்த இனிப்புகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் கொடுத்து, ஸ்டாலின் எனது மூத்த சகோதரர் என கூறுகிறார். மு.க.ஸ்டாலினும் எனது அருமை சகோதரர் தம்பி ராகுல் என சொல்கிறார். இந்த அளவு ஒரு ஒற்றுமை இந்தியா கூட்டணியில் இருக்கிறது என தெரிவித்தார்.

மேலும் யார் பிரதமராக வரக்கூடாது என்பதில் இந்தியா கூட்டணி மிகத் தெளிவாக உள்ளது என்றார். அதிமுகவிற்கு சிலர் கூஜா தூக்கி செல்கிறார்கள் என தெரிவித்த அவர், சிஏஏ சட்டத்தை ஆதரித்து அதிமுகவினருக்கு சிலர் கூஜா தூக்கி செல்வதாக விமர்சித்தார். சிஏஏ சட்டத்தை ஆதரித்ததோடு மட்டும் அல்லாமல் தீர்மானத்தை நிறைவேற்ற மறுத்த அதிமுகவிற்கு கூஜா தூக்கிக் கொண்டு செல்கிறார்கள் என தெரிவித்தார்.

கோவை தொகுதியில் சமூக நல்லிணக்கமும், மதசார்பற்ற தன்மையும் அனைத்து மக்களின் உரிமைகளும் பேணிக்காக்கப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள் என தெரிவித்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...