பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி தாராபுரத்தில் விவசாயிகள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

பிஏபி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து பொன்னாபுரம் பிரிவு என்ற இடத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியில் ருத்ராவதி, செங்காளிபாளையம், கணபதிபாளையம், சுங்கிலியம்பாளையம் உள்ளிட்ட பி.ஏ.பி. பாசனம் பெறும் பகுதிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு முதல் சுற்று தண்ணீர் விடப்பட்டது. முதல் சுற்று தண்ணீர் குறிப்பிட்ட கால இடைவெளியில் விடப்பட்ட நிலையில், 2-வது சுற்று தண்ணீர் இதுநாள் வரை திறக்கப்படாததால் முதல் சுற்று தண்ணீரை நம்பி பயிர்செய்த விவசாயிகள் தொடர்ந்து செய்த பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போனது.

இதனால் பயிர்கள் கருகிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி குண்டடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முறையிட்டு விரைந்து தண்ணீர் திறக்கக் கோரியும் பொதுப்பணித்துறையினர் செவி சாய்க்காத காரணத்தினால் நேற்று முன்தினம் பி.ஏ.பி. பாசனம் பெறும் ஆயக் கட்டு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் யாரும் வராத நிலையில் பல்லடம் பொதுப்பணித்துறை எஸ்.டி.ஓ.நேரில் வந்து விவசாயிகளிடையே பேசினார்.



அப்போது விரைந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் பொதுப்பணித்துறை அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் இன்று தாராபுரம் கோவை மாநில நெடுஞ்சாலையில் பொன்னாபுரம் பிரிவு என்ற இடத்தில் விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் பிஏபி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பேருந்தில் கல்லூரி செல்வதற்காக காத்திருந்த மூன்று மாணவிகளை விவசாயிகள் காரில் அழைத்துச் சென்று பல்லடம் பேருந்து நிலையத்தில் மூன்று மாணவிகளை விவசாயிகள் இறக்கி விட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 27 வேட்புமனுக்கள்: முக்கிய கட்சி வேட்பாளர்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லை

Coimbatore மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 27 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாவட்டத்தில் இதுவரை 42 வேட்பாளர்கள் மன...

வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் நெஞ்சு வலியால் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Coimbatore மாவட்டம் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது, Pharm-D மாணவரான முகேஷ் குமார் (23) மார்பு வலியால் சுயநினைவை இழந்த...

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் S.தாமோதரனை நேரில் சந்தித்து வாழ்த்திய அண்ணாமலை

கோவை: வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக சார்பில் கிணத்துக்கடவு தொகுதி வேட்பாளர...

கிணத்துக்கடவு தொகுதி வெற்றி வேட்பாளர் S.தாமோதரனை அண்ணாமலை நேரில் சந்தித்து வாழ்த்து

கோயம்புத்தூரில் BJP முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் NDA சார்பில் AIADMK கிணத்த...

நினைத்ததை சாதிக்கும் செயல்வீரர் செந்திலபாலாஜி - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மின்துறை அம...

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...