ஆர்.எஸ்.புரத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்க முடியவில்லை – உடுமலையில் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் பதிலடி

ஆனைமலை நல்லாறு திட்டத்தை மாநில அரசுகள் மட்டும் தான் நிறைவேற்ற முடியும் என்ற தவறான செய்தியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருவதாக பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் புகார் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கிழவன் காட்டூர், இளைய முத்தூர், கல்லாபுரம் உட்பட முப்பதுக்கு மேற்பட்ட இடங்களில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் செய்தியாளரிடம் கூறும் பொழுது, கடந்த சில தினங்களுக்கு முன் தொண்டாமுத்தூர் பகுதியில் நாடளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு தான் போட்டி பாஜக வைப்புத் தொகை கூட பெற முடியாது என முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியது குறித்து கேட்டதற்கு, கோவையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் அதிமுகவிற்கு பூத் கமிட்டிக்கு ஆட்கள் போட முடியாத ஒரே கட்சி அதிமுக. ஆகையால் இவர்கள் பாஜக பற்றி குறை கூறுவதற்கு தகுதி இல்லை என பதிலடி கொடுத்தார்.



மேலும் பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆனைமலை நல்லாறு திட்டத்தை மாநில அரசுகள் மட்டும் தான் நிறைவேற்ற முடியும் என வாக்குறுதி அளித்து வருகிறார்கள். இது தவறான செய்தி. மாநில அரசுகள் தான் அமைக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிய நிலையில், ஆனைமலை நல்லாறு திட்டத்தை பாஜக மட்டும் தான் அமைக்க முடியும்.



கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோமாவில் இருந்தாரா அப்பொழுது நிறைவேற்றி இருக்கலாமே என வசந்த ராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வாக்கு சேகரிப்பின் போது தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி, மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன், திருப்பூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி மற்றும் மடத்துக்குளம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், கல்லாபுரம் ஊராட்சி செயலாளர் செல்வக்கனி, கல்லாபுரம் ஊராட்சி கிளை சோமகுமார், ஒன்றிய இணை செயலாளர் மோகன், பூளவாடி கிளை செயலாளர் மாரிமுத்து, பூச்சிமேடு காளிமுத்து, இந்திரநகர் லட்சுமணன், வேல்நகர் கிளை செயலாளர் பரமேஸ்வரன், மாவளபாறை வெங்காடச்சலாம், கோபலபுரம் கிளை செயலாளர் செல்லமுத்து, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் செல்லம்ம்மாள், உடுமலை கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பட பிரிவு குமரேசன் மற்றும் பலர் கொண்டனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...