வெயில் அதிகமாக அடிப்பதால் மூளை ஆவியாகி பேசுகிறார் - முத்தூரில் அண்ணாமலைக்கு பொள்ளாச்சி ஜெயராமன் பதிலடி

எடப்பாடியார் ரோட் ஷோ வந்தால் லட்சம் பேர் வருவார்கள். வெயில் அடிப்பதால் மூளை ஆவியாகி அண்ணாமலை பேசுகிறார் என எடப்பாடி பழனிச்சாமி குறித்த விமர்சனத்திற்கு பொள்ளாச்சி ஜெயராமன் பதிலடி கொடுத்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முத்தூர் வேலம்பாளையம் ஊராட்சி ராமமூர்த்தி நகரில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. வேலம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட அம்மா இணை செயலாளருமான A.S.ராமலிங்கம் முருகவேல் தலைமையில் நடைபெற்றது.

திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்பி.சிவசாமி, நமது அம்மா நாளிதழ் தலைமை ஆசிரியர் கல்யாணசுந்தரம், காங்கேயம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்என்.எஸ்.என்.நடராஜ், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், நகர செயலாளர் டீலக்ஸ் மணி, வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வெங்கடேச சுதர்ஷன் , மாவட்ட அம்மா இணை செயலாளர் ராமலிங்கம், முத்தூர் பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஏழு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதே பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் திமுக மற்றும் பாஜக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில்இணைந்தனர். அவர்கள்களுக்கு அதிமுக கழக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.



இந்த பரப்புரை கூட்டத்தில்வாக்கு சேகரித்த ஆற்றல் அசோக்குமார் ஐந்து ஆண்டுகள் வேலைக்காரனாக இருக்க தயாராக உள்ளேன். தேர்தலின் போது மட்டும் கொடுக்கின்ற ரூ.500 ரூ.1000 பணத்தை நம்பி வாக்களிக்காதீர்கள் என்றார். செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன் எடப்பாடி ரோடு ஷோ செல்ல முடியுமா என விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், எடப்பாடியார் நடந்தால் பேரணி நின்றால் மாநாடு என்றும் ஜூன் 4க்கு பிறகு அண்ணாமலையிடம் கேளுங்கள் என தெரிவித்த அவர், அண்ணாமலையின் வெற்றியேதீர்மானிக்கப்படவில்லை எனவும், வெயில் அதிகமாக அடிப்பதால் அவரது மூளை ஆவியாகி பேசி வருகிறார் என பொள்ளாச்சிஜெயராமன் விமர்சித்தார்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...