திருப்பூரில் காவல்துறையினருக்கான அஞ்சல் வாக்கு சிறப்பு முகாம் - ஆர்வமுடன் காவலர்கள் வாக்கு பதிவு

திருப்பூர் குமரன் சாலையில் இன்று காவல்துறையினருக்காக அஞ்சல் வாக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமில் திருப்பூரில் பணியில் உள்ள காவலர்கள் தங்களது தபால் வாக்கினை ஆர்வமுடன் பதிவு செய்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் தேர்தல் நாளன்று தங்கள் வாக்கை பதிவு செய்ய முடியாத வகையில் பல்வேறு இடங்களில் பணி செய்யும் சூழல் உள்ளதால் அவர்களுக்கு அஞ்சல் வாக்கு வழங்கப்பட்டு முன்கூட்டியே செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.



அதன்படி திருப்பூர் குமரன் சாலையில் இன்று காவல்துறையினருக்காக அஞ்சல் வாக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமில் திருப்பூரில் பணியில் உள்ள காவலர்கள் தங்களது தபால் வாக்கினை ஆர்வமுடன் பதிவு செய்தனர். திருப்பூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் பிற பகுதிகளில் உள்ள காவலர்களும் தனித்தனியே தங்கள் வாக்கை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. அஞ்சல் வாக்கு பதிவை திருப்பூர் மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான பவன் குமார் கிரியப்பனவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...