ஓட்டுக்கு பணம் நாட்டுக்கு அழிவு என்பதை வலியுறுத்தி கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்

ஓட்டுக்கு பணம் தர மாட்டோம். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் அறிவிக்க வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் வலியுறுத்தினர்.


கோவை: கோவையில் ஓட்டுக்கு பணம் நாட்டுக்கு அழிவு என்பதை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்றது. கோவை சிவானந்தா காலனி பகுதியில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.



இந்த இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் ஒரு 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



ஓட்டுக்கு பணம் தர மாட்டோம். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன் ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை படுகொலை செய்து இருக்கிறார்கள். இந்தியாவின் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி அதனால் இந்த கட்சிகள் எல்லாம் உண்மையிலேயே ஜனநாயகத்தை காப்பாற்றுவார் என்றால் இந்த மாபெரும் அரசியல் கட்சித் தலைவர்கள் உண்மையிலேயே ஜனநாயகத்தை காப்பாற்றுவார் என்றால் இந்த மாபெரும் கட்சித் தலைவர்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய தலைவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

இந்த நாட்டின் ஜனநாயக தலைவராக அவர்கள் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். எங்களுடைய கோரிக்கை நாளை தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களை கோயம்புத்தூருக்கு வர இருக்கிறார். கோயம்புத்தூரில் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் ஓட்டுக்கு பணம் கொடுக்காது என்று அறிவிக்க வேண்டும். அதைப்போல அனைத்து கட்சிகளும் அனைத்திந்திய அண்ணா திராவிட கழகம் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் எங்கள் கட்சி ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும். அதேபோல பாரத கட்சி ஜனநாயக கட்சி இவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று அறிவிக்க வேண்டும் எங்களுடைய கோரிக்கை என்றார்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...