கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஒரே இடத்தில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரம்

சிறப்பு தொழுகை முடித்து வெளியே வந்தவர்களிடம், ஆயிஷா மஹாலின் வலது புறம் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியும், இடதுபுறம் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் அப்புசாமியும் வெள்ளை தொப்பி அணிந்து வாக்கு சேகரித்தனர்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் கோவையில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று ஏப்ரல்.10 ஒரே இடத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



அதன்படி ரமலான் பண்டிகையை முன்னிட்டு கோவை ஆத்துப்பாலம் ஆயிஷா மஹாலில் ரமலான் சிறப்பு தொழுகைக்கு இன்று ஏப்ரல்.10 ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று விட்டு வெளியே வந்த பொழுது, அவ்வழியாக வந்த பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் அப்புசாமி இருவரும் வாக்கு சேகரிக்க ஆரம்பித்தனர்.



ஆயிஷா மஹாலின் வலது புறம் ஈஸ்வரசாமியும், இடதுபுறம் கார்த்திகேயன் அப்புசாமியும் வெள்ளை தொப்பி அணிந்து வாக்கு சேகரிக்க ஆரம்பித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...