கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஒரே இடத்தில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரம்

சிறப்பு தொழுகை முடித்து வெளியே வந்தவர்களிடம், ஆயிஷா மஹாலின் வலது புறம் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியும், இடதுபுறம் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் அப்புசாமியும் வெள்ளை தொப்பி அணிந்து வாக்கு சேகரித்தனர்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் கோவையில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று ஏப்ரல்.10 ஒரே இடத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



அதன்படி ரமலான் பண்டிகையை முன்னிட்டு கோவை ஆத்துப்பாலம் ஆயிஷா மஹாலில் ரமலான் சிறப்பு தொழுகைக்கு இன்று ஏப்ரல்.10 ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று விட்டு வெளியே வந்த பொழுது, அவ்வழியாக வந்த பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் அப்புசாமி இருவரும் வாக்கு சேகரிக்க ஆரம்பித்தனர்.



ஆயிஷா மஹாலின் வலது புறம் ஈஸ்வரசாமியும், இடதுபுறம் கார்த்திகேயன் அப்புசாமியும் வெள்ளை தொப்பி அணிந்து வாக்கு சேகரிக்க ஆரம்பித்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...