வால்பாறை அருகே நல்லகாத்து எஸ்டேட் இரண்டாவது பிரிவில் தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து

தீ விபத்தில் ரங்கநாயகி, மணியம்மாள், ராமலட்சுமி, மங்கள்சிங், பங்கஜ் ஆகிய ஐந்து பேரின் வீடுகள் முற்றிலும் எரிந்து சேதம் ஆனது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் நாசமானதால் தங்க இடம் இல்லாமல் அவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


கோவை: வால்பாறை அருகே நல்லாகாத்து எஸ்டேட் உள்ளது. இங்கு சுமார் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எஸ்டேட் நிர்வாகத்தின் தரப்பில் கட்டி தரப்பட்டுள்ள குடியிருப்பு பகுதியில் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை சுமார் 9 மணி அளவில் நல்லாகாத்து இரண்டாவது டிவிஷனில் வீட்டில் லேசான தீ எரிந்து உள்ளது.எஸ்டேட் மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



எஸ்டேட் நிர்வாகம் எஸ்டேட் வாகனத்தின் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 5 வீடுகள் முற்றிலும் சேதமானது. ரங்கநாயகி, மணியம்மாள், ராமலட்சுமி, மங்கள்சிங், பங்கஜ் ஆகிய ஐந்து பேரின் வீடுகள் முற்றிலும் தீயிற்கு சேதம் ஆனது.

வீட்டில் வைத்திருந்த டிவி, பீரோ, துணிமணி, நகைகள் மற்றும் வீட்டு உபகரண பொருட்கள் அனைத்தும் தீயினால் சேதம் அடைந்தது. இந்த தீ விபத்து பற்றி வால்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



வால்பாறை பகுதியில் சுமார் 75 ஆண்டுகளாக குடியிருப்பு பகுதிகள் உள்ளதாகவும், குடியிருப்பில் தற்போது பராமரிப்பு இன்றி வருவதாகவும், இதனால் எஸ்டேட் வீடுகள் ஆங்காங்கே தீப்பற்றி எரிந்து சேதம் அடைவதாகவும் மக்கள் தெருவித்தனர்.

சுமார் 56 எஸ்டேட் பகுதிகளுக்கும், வால்பாறை மையப்பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனம் செல்வதற்கு சுமார் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் ஆகிறது. இதனால் தீ சில சமயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராமல் முற்றிலும் சேதம் அடைகிறது என்பதால் எஸ்டேட் நிர்வாகமே ஒவ்வொரு எஸ்டேட்டுக்கும் தீயணைப்பு வாகனங்கள் வைக்குமாறும், தீ தடுக்கும் உபகரணங்கள் வைக்கும்படியாகவும் தொழிற்சங்க தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...