கோவை செட்டிபாளையத்தில் திமுக தேர்தல் பிரச்சாரம் நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு

வருகிற 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி எம்பி., இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய‌ உள்ளனர்.


கோவை: கோவை, செட்டிபாளையம் L&T பைபாஸ் சாலையில், வருகிற 12-4-2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்பி., இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற தேர்தல்-2024, இந்தியா கூட்டணி திமுக கழக‌ கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரி, தேர்தல் பிரச்சாரம் செய்ய‌ உள்ளனர்.



இந்த நிலையில், கோவை, செட்டிபாளையம் L&T பைபாஸ் சாலையில், மைதானத்தில் பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட உள்ள இடத்தை, இன்று ஏப்ரல்.10 தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை துறை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.



உடன் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ.,கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...