யுகாதி பண்டிகையை முன்னிட்டு உடுமலை திருப்பதி கோவிவில் திருக்கல்யாணம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஸ்ரீ ஜமத்கனி மகரிஷி ரேணுகாதேவி ஆகியோர் திருக்கல்யாண கோலத்தில் பரசுராமருடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் மனம் உருகி ரேணுகாதேவி அம்மனை வழிபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பள்ளபாளையம் அருகே உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை விழா இன்று நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 25-ம் தேதி முதல் கோவிலுக்கு அருகே உள்ள புற்றுகோவில் கம்ம குல தேவதை ரேணுகாதேவி அம்மனுக்கு நாள்தோறும் பஜனை பாடல்களுடன் சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து நாம சங்கீர்த்தனம்- பிருந்தாவனம் நிகழ்வும், பஜனையும் நடைபெறுகிறது.



நேற்று மாலை 5 மணிக்கு புற்று பூஜையை தொடர்ந்து பாலாற்று பூஜையும், உடுமலை திருப்பதி கோவில் வளாகத்தில் ரேணுகாதேவி அம்மனுக்கு சக்தி அழைப்பும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை10 மணி முதல் மதியம் 1 மணி வரை பத்மாவதி தாயார் மண்டபத்தில் ஸ்ரீஜமத்கனி மகரிஷி ரேணுகாதேவி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

முதல் நிகழ்வாக உடுமலை திருப்பதி விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பும், 2-ம் நிகழ்வாக ரேணுகாதேவி திருக்கல்யாண உபன்யாசம், விநாயகர் பூஜை, சுத்தி புண்யாகம், விநாயகர் பூஜை மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. 3-ம் நிகழ்வாக வேள்வி வளர்த்தப்பட்டு அக்னி சாட்சியுடன் ஸ்ரீஜமத்கனி மகரிஷி ரேணுகாதேவி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து ஸ்ரீ ஜமத்கனி மகரிஷி ரேணுகாதேவி ஆகியோர் திருக்கல்யாண கோலத்தில் பரசுராமருடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் அனைவரும் மனம் உருகி ரேணுகாதேவி அம்மனிடம் கோரிக்கைகளை சொல்லி வழிபாடு செய்தனர். இதையடுத்து கோ பூஜை, கண்ணாடி தரிசனம், கன்னிகா பூஜை, ராஜ தரிசனம், தம்பதி பூஜை, தீபாராதனை, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

திருப்பதி கோவிலில் யுகாதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...