யுகாதி பண்டிகையை முன்னிட்டு உடுமலை திருப்பதி கோவிவில் திருக்கல்யாணம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஸ்ரீ ஜமத்கனி மகரிஷி ரேணுகாதேவி ஆகியோர் திருக்கல்யாண கோலத்தில் பரசுராமருடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் மனம் உருகி ரேணுகாதேவி அம்மனை வழிபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பள்ளபாளையம் அருகே உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை விழா இன்று நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 25-ம் தேதி முதல் கோவிலுக்கு அருகே உள்ள புற்றுகோவில் கம்ம குல தேவதை ரேணுகாதேவி அம்மனுக்கு நாள்தோறும் பஜனை பாடல்களுடன் சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து நாம சங்கீர்த்தனம்- பிருந்தாவனம் நிகழ்வும், பஜனையும் நடைபெறுகிறது.



நேற்று மாலை 5 மணிக்கு புற்று பூஜையை தொடர்ந்து பாலாற்று பூஜையும், உடுமலை திருப்பதி கோவில் வளாகத்தில் ரேணுகாதேவி அம்மனுக்கு சக்தி அழைப்பும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை10 மணி முதல் மதியம் 1 மணி வரை பத்மாவதி தாயார் மண்டபத்தில் ஸ்ரீஜமத்கனி மகரிஷி ரேணுகாதேவி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

முதல் நிகழ்வாக உடுமலை திருப்பதி விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பும், 2-ம் நிகழ்வாக ரேணுகாதேவி திருக்கல்யாண உபன்யாசம், விநாயகர் பூஜை, சுத்தி புண்யாகம், விநாயகர் பூஜை மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. 3-ம் நிகழ்வாக வேள்வி வளர்த்தப்பட்டு அக்னி சாட்சியுடன் ஸ்ரீஜமத்கனி மகரிஷி ரேணுகாதேவி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து ஸ்ரீ ஜமத்கனி மகரிஷி ரேணுகாதேவி ஆகியோர் திருக்கல்யாண கோலத்தில் பரசுராமருடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் அனைவரும் மனம் உருகி ரேணுகாதேவி அம்மனிடம் கோரிக்கைகளை சொல்லி வழிபாடு செய்தனர். இதையடுத்து கோ பூஜை, கண்ணாடி தரிசனம், கன்னிகா பூஜை, ராஜ தரிசனம், தம்பதி பூஜை, தீபாராதனை, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

திருப்பதி கோவிலில் யுகாதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...