திமுக ஆட்சியில் மது மற்றும் கஞ்சா விற்பனை அமோகம் - உடுமலையில் பாஜக வேட்பாளர் வசந்தராஜன் பேச்சு

தன்னை வெற்றி பெற செய்தால் உடுமலை ரயில் நிலையத்தை விரிவுபடுத்துவேன், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க பாடுபடுவேன் என்று பாஜக வேட்பாளர் வசந்தராஜன் உறுதியளித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் ஏரிபாளையம், தலை கொண்ட அம்மன், கோவில் பகுதி, காந்தி சவுக் உட்பட பல்வேறு பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பின்போது பேசிய அவர்,தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில் சிங்கள ராணுவ படைகளால் மீனவர்கள் அதிக அளவு சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார்கள். மேலும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் மற்றும் 2ஜி அலைக்கற்றையில் ஊழல் உட்பட பல்வேறு துறைகளில் ஊழல் நிறைந்து காணப்பட்டது.



கடந்த சில வருடங்களுக்கு முன்பு திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் மதுவால் தமிழகத்தில் விதவைகள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு உள்ளது என கனிமொழி அப்போது பரப்புரையில் பேசினார். ஆனால் திமுக ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் தற்பொழுது வீதி வீதியாக கள்ளத்தனமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட போதை பொருட்கள் அனைத்தும் தாராளமாக கிடைக்கின்றது. திமுக ஆட்சிக் காலத்தில் இலவசங்களை மகளிர்களுக்கு கொடுத்துவிட்டு ஏளனமாக பேசி வருகிறார்கள்.எனவே பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் என்னை வெற்றி பெற செய்தால் உடுமலை ரயில் நிலையத்தை விரிவுபடுத்துவேன், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க பாடுபடுவேன், நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க வழிவகை செய்வேன் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.

வாக்கு சேகரிப்பின் போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் சண்முகவேலு, திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி, மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், உடுமலை நகர தலைவர் கண்ணாயிரம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, ஓபிஸ் அணி அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...