திமுக ஆட்சியில் மது மற்றும் கஞ்சா விற்பனை அமோகம் - உடுமலையில் பாஜக வேட்பாளர் வசந்தராஜன் பேச்சு

தன்னை வெற்றி பெற செய்தால் உடுமலை ரயில் நிலையத்தை விரிவுபடுத்துவேன், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க பாடுபடுவேன் என்று பாஜக வேட்பாளர் வசந்தராஜன் உறுதியளித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் ஏரிபாளையம், தலை கொண்ட அம்மன், கோவில் பகுதி, காந்தி சவுக் உட்பட பல்வேறு பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பின்போது பேசிய அவர்,தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில் சிங்கள ராணுவ படைகளால் மீனவர்கள் அதிக அளவு சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார்கள். மேலும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் மற்றும் 2ஜி அலைக்கற்றையில் ஊழல் உட்பட பல்வேறு துறைகளில் ஊழல் நிறைந்து காணப்பட்டது.



கடந்த சில வருடங்களுக்கு முன்பு திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் மதுவால் தமிழகத்தில் விதவைகள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு உள்ளது என கனிமொழி அப்போது பரப்புரையில் பேசினார். ஆனால் திமுக ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் தற்பொழுது வீதி வீதியாக கள்ளத்தனமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட போதை பொருட்கள் அனைத்தும் தாராளமாக கிடைக்கின்றது. திமுக ஆட்சிக் காலத்தில் இலவசங்களை மகளிர்களுக்கு கொடுத்துவிட்டு ஏளனமாக பேசி வருகிறார்கள்.எனவே பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் என்னை வெற்றி பெற செய்தால் உடுமலை ரயில் நிலையத்தை விரிவுபடுத்துவேன், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க பாடுபடுவேன், நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க வழிவகை செய்வேன் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.

வாக்கு சேகரிப்பின் போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் சண்முகவேலு, திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி, மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், உடுமலை நகர தலைவர் கண்ணாயிரம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, ஓபிஸ் அணி அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...