தேர்தலை புறக்கணிக்கப் போவதாக குழிப்பட்டி மலைவாழ் மக்கள் அறிவிப்பு – அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆத்திரம்

குழிப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த நாகம்மாள் (22) பிரசவ வலியில் துடித்த நிலையில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த இளைஞர்கள் ஏழு கிலோமீட்டர் தூரம் கரடு முரடான மலை பாதையில் தொட்டில் கட்டி தூக்கி வந்து எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரக பகுதியில் குழிப்பட்டி, குருமலை, மாவடைப்பு என 15 மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. ஐந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் சாலை, குடிநீர், வீடு என அடிப்படை வசதி இல்லாமல் பல ஆண்டு காலமாக அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு கூட பாதிக்கப்படும் மக்களை தொட்டில் கட்டி தூக்கி வரும் அவலமும், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் பல உயிர் இழப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று குழிப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த நாகம்மாள் (22) பிரசவ வலியில் துடித்த நிலையில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த இளைஞர்கள் ஏழு கிலோமீட்டர் தூரம் கரடு முரடான மலை பாதையில் தொட்டில் கட்டி தூக்கி வந்து எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.



இந்த நிலையில் பல ஆண்டுகளாக சாலை வசதி மலைவாழ் மக்கள் வேண்டுமென மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் தற்போது வரைசாலை வசதி அமைக்கப்படாத நிலையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மலைவாழ் மக்கள் புறக்கணிக்க போவதாகவும், மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு யாரும் ஓட்டு கேட்க வர வேண்டாம் என ஆவேசமாக தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...