தேர்தலை புறக்கணிக்கப் போவதாக குழிப்பட்டி மலைவாழ் மக்கள் அறிவிப்பு – அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆத்திரம்

குழிப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த நாகம்மாள் (22) பிரசவ வலியில் துடித்த நிலையில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த இளைஞர்கள் ஏழு கிலோமீட்டர் தூரம் கரடு முரடான மலை பாதையில் தொட்டில் கட்டி தூக்கி வந்து எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரக பகுதியில் குழிப்பட்டி, குருமலை, மாவடைப்பு என 15 மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. ஐந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் சாலை, குடிநீர், வீடு என அடிப்படை வசதி இல்லாமல் பல ஆண்டு காலமாக அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு கூட பாதிக்கப்படும் மக்களை தொட்டில் கட்டி தூக்கி வரும் அவலமும், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் பல உயிர் இழப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று குழிப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த நாகம்மாள் (22) பிரசவ வலியில் துடித்த நிலையில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த இளைஞர்கள் ஏழு கிலோமீட்டர் தூரம் கரடு முரடான மலை பாதையில் தொட்டில் கட்டி தூக்கி வந்து எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.



இந்த நிலையில் பல ஆண்டுகளாக சாலை வசதி மலைவாழ் மக்கள் வேண்டுமென மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் தற்போது வரைசாலை வசதி அமைக்கப்படாத நிலையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மலைவாழ் மக்கள் புறக்கணிக்க போவதாகவும், மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு யாரும் ஓட்டு கேட்க வர வேண்டாம் என ஆவேசமாக தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...