10 ஆம் தேதி பிரதமர் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்க தடை - காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவிப்பு.

வருகிற 9, 10 தேதிகளில், மேட்டுப்பாளையம், தென் திருப்பதி நால்ரோடு, சுற்றி 5 கி. மீ. தொலைவிற்கு மற்றும் பிரதமர் வரவிருக்கும் வழித்தடத்தில், எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வரவுள்ள பிரதமர் மோடி, வரும் 10 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதையடுத்து, கோவை, நீலகிரி பாராளுமன்ற தொகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று (ஏப்ரல்.8) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் மோடி, வருகின்ற 10. 04. 2024 தேதி புதன்கிழமையன்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் உட்கோட்டம், காரமடை காவல் நிலைய பகுதியில் உள்ள தென் திருப்பதி நால் ரோடு சந்திப்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தர உள்ளார்.

பிரதமரின் வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பொது கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து 5 கி. மீ. சுற்றளவிற்கு பிரிவு 24 (ii) of Drones Rules 2021- ன் படி 09. 04. 2024 மற்றும் 10. 04. 2024 ஆகிய இரு தினங்களுக்கு தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அதில், பொது கூட்டம் நடக்கும் இடமான கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் உட்கோட்டம், தென் திருப்பதி நால்ரோடு அதனை சுற்றி 5 கி. மீ. தொலைவிற்கு (வான் வழியாக) மற்றும் அவர்கள் வரவிருக்கும் வழித்தடத்தில், வருகிற 09. 04. 2024 மற்றும் 10. 04. 2024 ஆகிய இரு தினங்களுக்கு எவ்வித டிரோன்கள் (Drones) மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Unmanned Aircraft System Flights) பறக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...