10 ஆம் தேதி பிரதமர் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்க தடை - காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவிப்பு.

வருகிற 9, 10 தேதிகளில், மேட்டுப்பாளையம், தென் திருப்பதி நால்ரோடு, சுற்றி 5 கி. மீ. தொலைவிற்கு மற்றும் பிரதமர் வரவிருக்கும் வழித்தடத்தில், எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வரவுள்ள பிரதமர் மோடி, வரும் 10 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதையடுத்து, கோவை, நீலகிரி பாராளுமன்ற தொகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று (ஏப்ரல்.8) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் மோடி, வருகின்ற 10. 04. 2024 தேதி புதன்கிழமையன்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் உட்கோட்டம், காரமடை காவல் நிலைய பகுதியில் உள்ள தென் திருப்பதி நால் ரோடு சந்திப்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தர உள்ளார்.

பிரதமரின் வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பொது கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து 5 கி. மீ. சுற்றளவிற்கு பிரிவு 24 (ii) of Drones Rules 2021- ன் படி 09. 04. 2024 மற்றும் 10. 04. 2024 ஆகிய இரு தினங்களுக்கு தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அதில், பொது கூட்டம் நடக்கும் இடமான கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் உட்கோட்டம், தென் திருப்பதி நால்ரோடு அதனை சுற்றி 5 கி. மீ. தொலைவிற்கு (வான் வழியாக) மற்றும் அவர்கள் வரவிருக்கும் வழித்தடத்தில், வருகிற 09. 04. 2024 மற்றும் 10. 04. 2024 ஆகிய இரு தினங்களுக்கு எவ்வித டிரோன்கள் (Drones) மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Unmanned Aircraft System Flights) பறக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...