பெரியநாயக்கன்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு 12 அடி ரோஜா மாலையை கிரேன் மூலம் அணிவித்து வரவேற்பு

பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் உடன் இணைந்து அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக கோவை பாராளுமன்ற வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு 12 அடி ரோஜா மாலையை கிரேன் மூலம் அணிவித்து 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர்.



கோவை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ இன்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் ஆதரவு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.



இதில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது சிங்கை ராமச்சந்திரனுக்கு 12 அடி ரோஜா மாலையை கிரேன் மூலம் அணிவித்து 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர்.



அப்போது பேசிய ராமச்சந்திரன் நான் வெளியூர்காரன் இல்லை. உங்கள் ஊர்க்காரன். நடுத்தர குடும்பத்தைச் சேர்தவன். போன் செய்தால் எடுப்பேன் மிஸ்டுகால் இருந்தாலும் உடனே கூப்பிடுவேன். மத்தியில் யார் பிரதமர் ஆனாலும் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் கோவைக்கு தேவைக்குத் தேவையானதை போராடி பெற்று தருவேன் என்றார்

Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...