செங்கல் சூளை தொழிலை மீண்டும் கொண்டுவர முயற்சி - சின்னதடாகத்தில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேச்சு

மத்தியில் யார் பிரதமர் ஆனாலும் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் கோவைக்கு தேவைக்குத் தேவையானதை போராடி பெற்று வருவேன் என்று அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் உறுதியளித்துள்ளார்.


கோவை: கோவை சின்னதடாகம், சோமையம்பாளையம், கணுவாய், சோமையனூர், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை ஆகிய பகுதியில் அதிமுக பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமாருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய ராமச்சந்திரன் நான் வெளியூர்காரன் இல்லை உங்கள் ஊர்க்காரன்.



நடுத்தர குடும்பத்தைச் சேர்தவன். போன் செய்தால் எடுப்பேன் மிஸ்டுகால் இருந்தாலும் உடனே கூப்பிடுவேன். மத்தியில் யார் பிரதமர் ஆனாலும் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் கோவைக்கு தேவைக்குத் தேவையானதை போராடி பெற்று வருவேன். ஒவ்வொரு ஊருக்கென்று ஒவ்வொரு தொழில் உண்டு. அதேபோல் இந்த பகுதியில் செங்கல் சூளை தான் முக்கியத்து தொழிலாக இருந்தது அதனை அழிய விடக்கூடாது. அது தான் அந்தப் பகுதி மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வந்தது.

எனவே மீண்டும் கொண்டுவர முயற்சி எடுப்பேன். அப்போது திடீரென கூட்டத்திலிருந்து ஒரு பெண்மணி ரேஷன் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி போட்டு எங்களுக்கு வயிற்று வலி வந்து விட்டதாக கூறினார். பால் விலை, கரண்ட் பில், தண்ணீர் வரி, வீட்டுவரி, சொத்து வரி என எல்லா வரிகளையும் ஏற்றிவிட்டனர். 3 ஆண்டடுகளில் திமுக ஒன்றும் செய்யவில்லை, 10 ஆண்டுகளில் மோடி இருந்தும் 10 பைசாவிற்கு பிரயோஜ்ஜனம் இல்லை கொரோனா காலத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைவரின் வீட்டிற்கும் 1 மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் வழங்கினோம். தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்து வெரும் மஞ்சள் கயிறோடு இருக்கின்றீர்கள். இவ்வாறு வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேசினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...