பொள்ளாச்சி நகர பகுதிகளில் பாஜக வேட்பாளர் வசந்தராஜன் வாக்கு சேகரிப்பு

பொள்ளாச்சி பகுதியில் மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளி கொண்டுவரப்படும் என்றும், ஆனைமலை-நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் வாக்குறுதி அளித்தார்.


கோவை: தேசிய ஜனநாயக கூட்டணியில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வசந்தராஜன், பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று பொள்ளாச்சி நகரப் பகுதிகளில் வீதி வீதியாக தாமரைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.



அப்போது பேசிய அவர், தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் வரி உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், பொள்ளாச்சி நகரப் பகுதிக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் இல்லாமல் இருப்பதாக பேசிய வேட்பாளர் வசந்தராஜன், பொள்ளாச்சி பகுதியில் மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளி கொண்டுவரப்படும் என்றும், 35 ஆண்டுகால பிரச்சனையான ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவேன் என்றும் வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...