கோவையில் 100 முதல் முறை வாக்காளர்கள் அண்ணாமலைக்கு வாக்களிக்க உள்ளதாக அறிவிப்பு

பாஜக எற்பாடு செய்த நிகழ்வில், உருமாண்டம்பாளையம் பகுதியில் முதல் முறை வாக்களிக்கவுள்ள 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அண்ணாமலைக்கு வாக்களிக்க உள்ளதாக தெரிவித்தனர்.


கோவை: கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.



இந்தநிலையில் கோவை உருமாண்டம்பாளைய் பகுதியில் முதல் முறை வாக்காளர்களாக வாக்களிக்கவுள்ள 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடினர்.



அவர்கள் அனைவரும் மோடி மற்றும் அண்ணாமலையில் செயல்பாடு பிடித்திருப்பதாகவும், மத்தியில் மீண்டும் மோடி பிரதமர் ஆக வேண்டி தங்களின் முதல் வாக்குகளை கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலைக்கு செலுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் கல்லூரியில் பயிலும் அனைவரும் மாலை நேரங்களில் தங்கள் கல்லூரி நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீடுகளுக்கு சென்று அண்ணாமலைக்காக தன்னார்வளர்களாக செயல்பட்டு வாக்குசேகரிக்கப்போவதாகவும் தெரிவித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை தேசிய வாக்காளர் பேரவை நிர்வாகி உருவை பாலன் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் இந்திரா, மரகதம், சாந்தகுமார், ராஜேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...