கோவையில் தேர்தல் பரப்புரை செய்வது குறித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஆகியோரின் வாக்குகளை வீடுகளுக்கே சென்று பதிவு செய்யும் பணிகளை கண்காணிப்பது, வாக்காளர்களை தொடர்ந்து சந்தித்து வாக்கு சேகரிப்பது போன்ற பணிகள் குறித்து திமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட திமுக, பெரியகடைவீதி பகுதி - 1 அலுவலகத்தில், கோவை நாடாளுமன்ற தொகுதி, இந்தியா கூட்டணி திமுகழக‌ வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப்ரல்.4) நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரது வாக்குகளை வீடுகளுக்கே சென்று பதிவு செய்யும் பணிகளை தொடங்குவதை‌ கண்காணிப்பது, வாக்காளர்களை தொடர்ந்து சந்தித்து, வாக்கு சேகரிப்பது போன்ற பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.



இந்த நிகழ்வில் தெற்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நாகராஜ், பெரிய கடைவீதி பகுதி-1 செயலாளர் மார்க்கெட் எம்.மனோகரன், பழக்கடை முத்து முருகன், வட்டக் கழகச் செயலாளர்கள் டவுன் பா.ஆனந்த், ப.ப.சிவக்குமார்,சுரேஷ் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...