பொள்ளாச்சி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் தென்னை நார் தொழிற்சாலை சங்க நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிப்பு

நழுவடைந்து வரும் தென்னை நார் தொழிற்சாலைகளை மேம்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று பாஜக வேட்பாளார் வசந்தராஜன் வாக்குறுதி அளித்தார்.


கோவை: தேசிய ஜனநாயக கூட்டணியில் பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளார் வசந்தராஜன் இன்று பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய பகுதிகளில் கிராம கிராமமாக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார்.



இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் தென்னை நார் தொழிற்சாலை சங்க நிர்வாகிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தென்னை நார் தொழிற்சாலை நிர்வாகிகள் மத்தியில் வாக்கு சேகரித்த வசந்த ராஜன், பல்வேறு காரணங்களால் நழுவடைந்து வரும் தென்னை நார் தொழிற்சாலைகளை மேம்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், தென்னைநார் தொழிற்சாலைகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த தென்னை நார் நகரமாக பொள்ளாச்சி மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,மேலும் பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

Newsletter

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...