வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பொள்ளாச்சியில் கொடி அணிவகுப்பு

மக்களவை தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.


கோவை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19.ஆம் தேதி ஒரே கட்டமாக நடைப்பெறவுள்ள நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பொள்ளாச்சி நகர் பகுதியில் தேர்தல் பணி பாதுகாப்பிற்றாக 100 க்கு மேற்பட்ட மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.



மேலும் வரும் ஏப்ரல் 19.ம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.



இந்த பேரணி கோவை சாலையில் உள்ள மகாலிங்கபுரம் பகுதியில் தொடங்கி காந்தி சிலை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வெங்கட்ராமன் பள்ளி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது.



இதில் மத்திய துணை ராணுவ படை மற்றும் காவல் துறையினர் என 485 பேர் கலந்துகொண்டு பாலக்காடு சாலையில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் அணிவகுப்பு பேரணி நிறைவடைந்தது.



பின்னர் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் எனவும் 100 சதவீதம் வாக்குபதிவை உறுதி செய்து பொதுமக்கள் அச்சமின்றி தங்களது ஜனநாயக கடமை மேலும் கோவை மாவட்டத்தில் பதட்டமாக உள்ள வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர் மற்றும் மத்திய துணை ராணுவப் படையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...