வீரபாண்டி கிராமத்தில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பிரச்சாரம்

தடாகம் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, பி.ஆர்.ஜி. அருண்குமார் ஆகியோர் பெயரில் அர்ச்சனை செய்து அங்கிருந்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தார்.


கோவை: கோவை அதிமுக சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரன் சின்ன தடாகம், மாங்கரை, வீரபாண்டி, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் உடன் இணைந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.



இதில் சின்ன தடாகம் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் வாக்கு சேகரிக்கும் போது அங்கிருந்த பொதுமக்களுடைய பேசிய வேட்பாளர் ராமச்சந்திரன், தான் இதே பகுதியைச் சேர்ந்த வேட்பாளர் என்றும், தனக்கு வாக்களித்தால் எப்பொழுது வேண்டுமென்றால் சந்திக்கலாம் என்றும், உங்களுக்காக பாராளுமன்றத்தில் எனக்கு ஒதுக்கப்படும் இருக்கையில் இருந்து உங்களுக்காக குரல் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.

தனது செல் நம்பர் அனைவருக்கும் தெரியும் என்றும், எப்போது வேண்டுமானாலும் எனது செல் நம்பருக்கு போன் செய்யலாம் ஒரு வேலை எடுக்காமல் இருந்தாலும் ஒரு நாளில் திரும்ப அழைப்பேன் என்றும் எக்காரணத்தைக் கொண்டும் மிஸ்டு கால் ஆகாது என்று தெரிவித்தார்.



முன்னதாக தடாகம் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்ட சிங்கை ராமச்சந்திரன் எடப்பாடி பழனிசாமி எஸ்.பி. வேலுமணி, பி.ஆர்.ஜி. அருண்குமார் ஆகியோர் பெயரில் அர்ச்சனை செய்து அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...