கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற வேட்பாளருக்கான பயிற்சி முகாம்

வரவு செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகளில் அதிக சத்தம் பயன்படுத்தக் கூடாது, தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் கல்வி பாதிக்கும் படி பிரச்சாரங்கள் இருக்கக் கூடாது என வேட்பாளர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளருக்கான பயிற்சி முகாம் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.31) நடைபெற்றது. இதில் தேர்தல் நடைமுறைகள், வேட்பாளர்கள் பின் பற்ற வேண்டிய வீதி முறைகள்,போட்டியிடும் கட்சிகளான அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் உட்பட சுயேட்சை வேட்பாளர்களுக்கான பயிற்சி கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தலைமையில் நடைபெற்றது.



பின்னர் பேசிய ஆட்சியர் மீடியாக்களை கவனமாக கையாள வேண்டும், வரவு செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகளில் அதிக சத்தம் பயன்படுத்தக் கூடாது, தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் கல்வி பாதிக்கும் படி பிரச்சாரங்கள் இருக்கக் கூடாது,வழிபாட்டு தலங்களில் பிரச்சாரங்கள் செய்யக்கூடாது என்று தெரிவித்தார். மேலும் இதில் கோவையில் 37 வேட்பாளர், பொள்ளாச்சியில் 18 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...