கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற வேட்பாளருக்கான பயிற்சி முகாம்

வரவு செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகளில் அதிக சத்தம் பயன்படுத்தக் கூடாது, தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் கல்வி பாதிக்கும் படி பிரச்சாரங்கள் இருக்கக் கூடாது என வேட்பாளர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளருக்கான பயிற்சி முகாம் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.31) நடைபெற்றது. இதில் தேர்தல் நடைமுறைகள், வேட்பாளர்கள் பின் பற்ற வேண்டிய வீதி முறைகள்,போட்டியிடும் கட்சிகளான அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் உட்பட சுயேட்சை வேட்பாளர்களுக்கான பயிற்சி கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தலைமையில் நடைபெற்றது.



பின்னர் பேசிய ஆட்சியர் மீடியாக்களை கவனமாக கையாள வேண்டும், வரவு செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகளில் அதிக சத்தம் பயன்படுத்தக் கூடாது, தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் கல்வி பாதிக்கும் படி பிரச்சாரங்கள் இருக்கக் கூடாது,வழிபாட்டு தலங்களில் பிரச்சாரங்கள் செய்யக்கூடாது என்று தெரிவித்தார். மேலும் இதில் கோவையில் 37 வேட்பாளர், பொள்ளாச்சியில் 18 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...