வாலிபால் விளையாடி உப்பிலிபாளையத்தில் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வாக்கு சேகரிப்பு

உப்பிலிபாளையம் பகுதியில் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பிரச்சார மேற்கொண்டார். அப்போது, அங்கு வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் வாலிபால் விளையாடி அவர் வாக்கு சேகரித்தார்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று (மார்ச்.31) கள்ளிமடை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக அங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை துவக்கினார். அவருக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.



அதனைத் தொடர்ந்து உப்பிலிபாளையம் பகுதியில் பிரச்சார மேற்கொண்ட அவர் அங்கு வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் வாலிபால் விளையாடி வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். மேலும் திமுக தொண்டர்கள் பலரும் இருசக்கர வாகனத்தில் கருப்புசிவப்பு பலூன்களுடனும் திமுக கொடியுடனும் பேரணியாகச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...